Monday, November 24, 2008

yoga

the universe starts from my sahasrara and ends in my kundalini

Sunday, August 10, 2008

எங்கும் இறைவன் எதிலும் இறைவன்

கந்தபுராணத்தில் யார் யார் எந்தெந்த வ்டிவில் லிங்கத்தை வழிபட்டனர் என்ற விபரம்:
  1. சப்த ரிஷிகள் - தர்ப்பை புல்லை எரித்து கிடைத்த கரியால் செய்தலிங்கம்
  2. சூரியன் - தாமிரலிங்கம்
  3. சந்திரன் - முத்துலிங்கம்
  4. அக்னி - கோமேதகலிங்கம்
  5. சுக்ராச்சாரியார் - மரகதலிங்கம்
  6. குபேரன் - தங்கலிங்கம்
  7. தேவர்கள் - வெள்ளிலிங்கம்
  8. வருணன் - பித்தளைலிங்கம்
  9. அஷ்டவசுக்கள் - வெண்கலலிங்கம்
  10. எமன் - இரும்புலிங்கம்
  11. தன்வந்திரி - பசுஞ்சானலிங்கம்
  12. கந்தர்வர் - மரலிங்கம்
  13. நாகர் - பவளலிங்கம்
  14. ராவணன் - மல்லிகை மலர்லிங்கம்
  15. மகாபலி - தானியலிங்கம்
  16. சீதை, பார்வதி, கபிலர் - மணல் லிங்கம்
  17. சரஸ்வதி - தன்வாக்கையே லிங்கமாக கருதியவள்
  18. புதன் - சங்குலிங்கம்
  19. அஸ்வினி தேவர்கள் - களிமண்லிங்கம்
  20. கருடன - அன்னலிங்கம்
  21. செவ்வாய் - வெண்ணெய்லிங்கம்
  22. காமன் - வெல்லலிங்கம்
  23. விஸ்வகர்மா - அரண்மனை வடிவ லிங்கம்
  24. விபீஷணன் - தூசு லிங்கம்
  25. ராக - பெருங்காய லிங்கம்
  26. யானை - தந்தலிங்கம்
  27. வால்மீக - புற்றுலிங்கம்

Saturday, August 9, 2008

ஆலயத்தில் செய்யக்கூடாதவை

1) கர்ப்பகிரஹத்தில் அலங்காரம் நடக்குகையில் திரையிட்டுருப்பார்கள். அச்சமயம் வழிபடுதல் கூடாது.
2) சுவாமிக்கும் பலி பீடத்துக்கும் குறுக்கே செல்லக்கூடாது
3) த்வஜஸ்தம்பம்,பலிபீடம்,விக்ரஹம்,ஆகியவற்றின் நிழழை மிதிக்கக்கூடாது.4) ஆலயத்தில் பெரியவர்களையோ,நண்பர்களையோ
கண்டால் வணங்கக்கூடாது.5) பிரசாதங்களை ஒருவருக்கொருவர்
இட்டுக்கொல்லக்கூடாது.6) சுவாமிகளை தொடுவது,திருவடிகளை
தொடுவது,விள்க்கேற்றுவது,திருவடிகளில் கற்பூரம் ஏற்றுவது
கூடாது.7)கோவிலுக்குள் அசுத்தம்,மலம்,ஜலம்,கழிக்கக்கூடாது.
8)ஸ்ரீருத்ரம் பெண்கள் படிப்பது வழக்கத்தில் இல்லை.

செய்யக்கூடாதவை

1) ஸந்த்யா காலத்தில் தூங்கக்கூடாது.
2) ஆகாயத்தை பார்த்தபடி தூங்கக்கூடாது
3) கோவில்களில் தூங்கக்கூடாது
4)தானியங்களின் மீது படுத்து தூங்கக்கூடாது
5)மரத்து நிழல்,ஒடிந்த கட்டில்,யானை தந்தத்தால் செய்யப்பட்ட
படுக்கை,புரச கால் கட்டில்,அத்தி,ஆல்,இச்சி அரசு,நாவல்,ஆகிய
மரங்களால் செய்யப்பட்ட கட்டில்,கருங்கல் படுக்கை ஆகியவற்றில்
படுத்து தூங்கக்கூடாது.ஈரக்காலுடன் படுத்து தூங்கக்கூடாது.ஒரு
காலால் மற்றொரு காலை தேய்த்து அலம்பக்கூடாது.கணவன்
மனைவி இருவருக்கும் இடையில் போகக்கூடாது.குருவிற்கும்
சீடனுக்கும் இடையே நடுவில் போகக்கூடாது.இரு கைகளாலும்
தலையை சொறியக்கூடாது. தலையில் வழித்து எண்ணையை
உடம்பில் தடவக்கூடாது.

இலட்சுமி தேவி நம்மிடமே இருக்க

புளிப்பு,இஞ்சி,தயிர்,எள்.கீரை இவற்றை இரவில் சாப்பிட்க்கூடாது.
சாப்பிடும் போது ரோமம் தென்பட்டால் அப்படியே எறிந்துவிடவேண்டும்.

ஆயுள் வளர்க்க

மாலை வெய்யிலில் காய்வது,ஹோமப்புகை மேலே படும்படியாக
இருப்பது,தன்னைவிட இளையவளை திருமணம் செய்துக்கொள்வது,
தூய்மையான தண்ணீரை குடிப்பது,இரவில் பால் சாதம் சாப்பிடுவது
ஆயுளை வளர்க்கும்.

ஆயுள் இழப்பு

பகலில் தூங்கினால் ஆயுள் இழப்பு உண்டாகும். இளம் வெய்யிலில்
காய்வது,பிணத்தின் புகை மேலே படும் படியாக இருப்பது,தன்னை
விட மூத்தவளை திருமணம் செய்துக்கொள்வது,கலங்கிய தண்ணீரை
குடிப்பது இரவில் தயிர் சாதம் சாப்பிடுவது இதனால் ஆயுள் இழப்பு
உண்டாகும்.